யார் நீதிமான்?😊
கிறிஸ்து இயேசுவின் அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே,இயேசப்பாவின் சமாதானமும் இரக்கமும் உங்கள் அனைவரோடும் என்றென்றும் இருப்பதாக-ஆமென் இன்றைய தலைப்பு சற்று வித்தியாசமானது என்றே சொல்லலாம் காரணம் இவற்றை நடைமுறை படுத்துவது சற்று கடினமான காரியம்,ஆனால் கவலை வேண்டாம் நம்மை நன்மையின் பாதையில் நம் கர்த்தாதி கர்த்தர் நடத்தி செல்வார், நீதிமான்-இந்த சொல் யாரை குறிக்கும்,எவன் ஒருவன் நீதியான காரியங்களை செய்கிறானோ அவனே நீதிமான்,அல்லது நீதியை நிலை பெறசெய்பவன் என்று விளக்கம் தரலாம் அவ்வாறு விளக்குவோமேயானால் எது நீதி என்ற கேள்வியும் எழும்பும் அல்லவா,இந்த இரண்டு காரியங்களையும் ஆவியானவர் தரும் வெளிச்சத்தில் இந்த பதிவில் காணலாம். எது நீதி?: பொதுவாக நாம் வாழும் இந்த உலகம் நீதியை நிலைநாட்ட மனதிற்குள் எண்ணம் கொள்ளும் ஆனால் அதை நடைமுறைபடுத்த பெரிதும் தயங்கும்,இந்த வகையில் பார்போமேயானால் ' நீதி' என்பது இந்த சூழலில் மாயை,நம் தேவனுக்கு முன் நீதி என்று வேதம் எதை கூறுகிறது என்று பார்கலாமா ' அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார்.' ஆதியாகமம் 15:6 இதில் அந்த அவன் என்ற...