பட்சிக்கும் அக்கினி🔥
கிறிஸ்து இயேசுவில் பிரியமுள்ள அன்பு தேவ பிள்ளைகளே,ஆண்டவரும் இரட்சகருமான இயேசுகிறிஸ்துவின் வருகை மிகவும் சமிபமாக இருக்கிறது எனவே ஆயத்தபடுவோம்;கர்த்தருக்கென்று ஒரு கூட்ட ஜனத்தை ஆயத்த படுத்துவோம் ! உலகமும் அதின் மேன்மையும் மாயை என்பதை உணர்ந்து பயணிப்போம்,ஆம் அன்பிற்குரியவர்களே எல்லாம் மாயையே,தேவ பிள்ளைகளாகிய உங்கள் தேவைகளை பரம தகப்பன் அறிந்துள்ளார்,உங்களுக்கென்று முன் குறித்த ஒன்றையும் எவராலும் தடை செய்ய இயலாது - ஆமென் சரி ,இன்றைய தினத்தில் கிறிஸ்தவ பிள்ளைகளாகிய நமது வாழ்க்கையில் தேவன் எவ்வாறு அக்கினியாகவும்,அரணாகவும் இருக்கிறார் என்பதை குறித்து ஒருசில நிமிடங்கள் தியனிப்போம்,தேவ வெளிச்சத்தை சுதந்தரித்து கொள்வோம்.சரி வேத புத்தகத்தை திருப்பி இந்த வசனத்தை என்னோடு எடுத்துக்கொள்ளுங்கள், " நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே". எபிரேயர் 12:29 ஏன் தேவன் பட்சிக்கிற அக்கினியாய் இருக்கிறார் என்று என்றாவது சிந்தித்திருகிறிர்களா? இந்த சிந்தனை என் உள்ளத்தில் எழுந்த போது இந்த காரியங்களை ஆவியான தேவன் வெளிப்படுத்தினார். யாத்திராகம புத்தகத்தை நாம் அனைவரும் வாசித்திருப்போம...