விதை🌱
கிறிஸ்து இயேசுவில் பிரியமான சகோதர, சகோதரிகளே! இயேசு கிறிஸ்துவின் கிருபையினாலும்,அவரது மாபெரும் இரக்கத்தினாலும் இந்த கடின காலத்திலும் இன்னாள் மட்டும் கடந்து வந்துள்ளோம்,கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! இன்றைய தினத்தில் உங்கள் அனைவருக்கும் மிகவும் பரிட்சயமான காரியத்தை குறித்து தியனிக்கலாம்,தியனத்திற்கென்ற இன்றைய தலைப்பு 'விதை',இந்த வேத வாக்கியங்களை கவனியுங்கள் "விதைக்கிறவன் வசனத்தை விதைக்கிறான்". மாற்கு 4:14 இந்த வசனத்தை கண்டவுடனே என்ன காரியத்தை குறித்து தியானிக்க போகிறோம் என்று கண்டுபிடித்திருப்பீர்கள்,வாழ்த்துக்கள்! ஆம்,விதைப்பவன் உவமையே.விவசாயம் பற்றி நமக்கு நன்றாக தெரியும்,வேதம் எழுதப்பட்ட காலக்கட்டத்தில் விவசாயம் தான் பிரதான தொழிலாக இருந்திருக்கிறது,எனவேதான் உவமைகளும் அதை சார்ந்து இருந்தன,விதைப்பவன் எதை விதைகிறானாம்? விதையாகிய தேவ வசனத்தை. ஏன் வசனத்தை விதைக்கவேண்டும்? : சுவிசேஷம் அறிவிப்பது நம்மேல் விழுந்த கடமை,அந்த கடமையை முழுமனதோடு ஆற்ற வேண்டும்,நாம் சொல்லும் சுவிசேஷம் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்,எனவேதான் வசனத்தை விதைக்கும் படி இயேசப்பா கற்றுகொடுத்தார்,வ...