Posts

வஸ்திரத்தின் ஓரம்👕

Image
கிறிஸ்து இயேசுவில் பிரியமான சகோதர சகோதரிகளே, மீண்டுமாக இந்த பதிவு வழியாக உங்களோடு வேத தகவல்களை பரிமாறிக்கொள்ளும்  படி அநுக்கிரகம் செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம்! இன்றைய தியானத்திற்கான தலைப்பு 'வஸ்திரத்தின் ஓரம்' நாம் எல்லாருக்கும் நன்று தெரிந்த சம்பவம், வேதத்தில் நமக்கு நன்கு பரிட்சையமான ஒரு அற்புதந்தான் இருந்தாலும் அறியாதவர்களுக்காக மீண்டும் எடுத்து காட்டுகிறேன், வேதாகமத்தை திறந்து என்னோடு இந்த பகுதிகளை வாசித்து பாருங்கள்  மாற்கு எழுதின சுவிசேஷம் 5ஆம் அதிகாரம் அதில் 27-29 வசனங்களை வாசியுங்கள் "ஜனக்கூட்டத்துக்குள்ளே அவருக்குப் பின்னாக வந்து,அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள்." மாற்கு 5:28 இயேசப்பா இந்த பூமியிலே நன்மை செய்கிறவராக சுற்றி தெரிந்தார் என வேதம் குறிப்பிடுகிறது, செல்லுமிடமெல்லாம் அற்புதங்களையும், அதிசையங்களையும் நடப்பித்தார், இங்கே பெரும்பாடு உள்ள ஸ்திரிக்கு இயேசப்பா செய்த அற்புதம் சற்று மாறுபட்டது இங்கு அந்த ஸ்திரி இயேசப்பாவை சந்திக்கவோ,தன் சுகவீனம் நீங்கும் படி வேண்டவோ இல்லை மாறாக தன் மனதில் விசுவாசம் உடையவளாய் அவரது வஸ்திரத்தை இன்னும் குறிப்பிட்ட சொல்...

யுத்தநாள்-2 சர்வாயுதவர்க்கம் 🛡🗡

Image
கிறிஸ்து இயேசுவில் பிரியமான சகோதர,சகோதரிகளே..பிதாவின் அன்பும்,நம் இரட்சகரான இயேசு கிறிஸ்து தரும் சமாதானமும்,பரிசுத்த ஆவியானவர் தரும் ஐக்கியமும்,விசுவாசமும் சதாகாலங்களும் உங்களனைவரோடும் இருப்பதாக-ஆமென்। என்னுடைய கடந்த பதிவினை வாசித்த அனைவருக்கும் நன்றிகள்,அதன் தொடர்சியை எனது அடுத்த பதிவில் பதிவிடுவேன் என்று சொன்னேன் அல்லவா! சரி,வாருங்கள் இன்று கிறிஸ்துவின் ஆவியானவர் நமக்கு அளிக்கும் போராயுதங்களை குறித்த காண்போம்,முதலாவது நீங்கள் அனைவரும் பிசாசுடனான நமது ஆவிக்குரிய யுத்தத்திற்கு தயாரா என்று சுயசோதனை செய்துபாருங்கள்,தயாராக உள்ள அனைவரும்,சர்வாயுதவர்க்கங்களை தரித்துகொள்ளுங்கள்,தகுதிபடாதவர்களோ உங்களை தேவனுக்கென்று ஒப்புகொடுத்து தகுதி படுத்திக்கொள்ளுங்கள் இதை தான் பரிசுத்த பவுல் பின்வருமாறு எபேசு பட்டணத்தாருக்கு  எழுதியுள்ளார் "நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்".  எபேசியர் 6:11 'போர்' அல்லது 'யுத்தத்தில்' எதிரியை நாம் மேற்கொள்ள தரமான ஆயுதங்கள் அவசியம் அல்லவா? இன்...

யுத்த நாள்🛡🏹

Image
கிறிஸ்து இயேசுவில் பிரியமான எனதருமை சகோதர சகோதரிகளே, இரட்சகரும் மீட்பருமான இயேசுவின் நாமத்தில் உங்களுக்கு கிருபையும் சமாதானமும் உண்டாவதாக-ஆமென் தேவனின் கிருபையால் மீண்டும் இந்த செய்தி பதிவின் வழியாக உங்களோடு உரையாடுவதில் மற்றற்ற மகிழ்ச்சி! இன்றைய தினத்தில் 'யுத்த நாள்' என்ற தலைப்பில் சில சத்தியங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆவியானவர் உதவி செய்துள்ளார்।ஒரு வசனத்தை மேற்கோள் காட்டி என் பதிவை தொடங்குகிறேன் "குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்."  நீதிமொழிகள் 21:31 அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே இன்று நாம் பார்க்க போகும் யுத்தம் சற்று வித்தியாசமானது,அப்படி என்ன யுத்தம் என்ற சிந்தனையும் கேள்வியும் மனதில் எழுகிறதா? "மாம்சத்தோடும் இரதத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு".  எபேசியர் 6:12 ஆம்,இதுதான் நான் உங்களோடு பகிர வந்த யுத்தம்,பிசாசின் அந்தகார வல்லமைக்கு எதிரான யுத்தம்,அவனுடைய தந்திரங்களுக்கெதிரான யுத்த...

மார்ஸ் மேடையும்,பவுலும்😎

Image
கிறிஸ்து இயேசுவில் எனக்கு அன்பான சகோதர சகோதரிகளே,இந்த பதிவில் உங்களுடன் கலந்துரையாட கிருபை செய்த இயேசுப்பாவுக்கு  ஸ்தோத்திரங்கள்,அவர் நாமம் மட்டுமே மகிமை படட்டும் நண்பர்களே இந்த 'மார்ஸ் மேடை' குறித்து நீங்கள் எங்காவது கேள்வி பட்டதுண்டா? உங்களில் சிலருக்கு தெரிந்திருக்க வாய்புகள் உண்டு,இந்த மார்ஸ் மேடை அத்தேனே என்னும் பட்டணத்தில் உள்ளது,சரி அதை நான் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும் என்றுதானே சிந்திக்கிறிர்கள் அதைதான் இந்த பதிவில் காணப்போகிறோம்,தொடர்ந்து ஜெபத்துடன் வாசியுங்கள்..நம்மில் பலர் இரட்ச்சிக் பட்டு இருக்கிறோம்-ஆமென்,இரட்ச்சிபின் முதல் நோக்கமே இயேசுவை அறியாத ஜனங்களுக்கு சுவிசேஷம் அறிவிப்பது,ஆனால் வேதத்திலுள்ள சத்தியங்களை அறிந்த நமக்கோ யாரிடம்,எப்படி அந்த மீட்பின் செய்தியை அறிவிப்பது என்று தெரிவதில்லை,பல சமயங்களில் வாக்குவாதங்களுக்குள் சிக்குண்டு தவிப்பதுண்டு,இங்கு அத்தேனே பட்டணத்திலும் இதுபோன்ற கருத்து வேறுபாடு எழும்புகிறது ஆனால் அதை கையாழுபவர் நம்மிலும் சற்று தேரினவர் ஆம்,அப்போஸ்தலனாகிய பவுல் தான் அந்த நபர்,அவர் வாக்குவாதம் செய்த இடம் விக்கிரக ஆராதனைகாரர்கள் நிறைந்...

கேட்டதும்,கேளாததும்🤔

Image
கிறிஸ்து இயேசுவில் பிரியமான அன்பு சகோதர சகோதரிகளே,இந்த பதிவின் வாயிலாக மீண்டும் உங்களுடன் உரையாடுவதில் கர்த்தருக்குள் பெரு மகிழ்ச்சியடைகிறேன்,இன்றைய தியானத்திற்கு ஆவியானவர் அருளின மறைவான மன்னா "கேளுங்கள் உங்களுக்கு கொடுக்க படும்" இந்த இறை வர்த்தை அனைவருக்கும் பரிச்சயமான வார்த்தைதான்,அநேகதரம் ஜெபிக்கையில் இந்த வசனத்தை நினைவுபடுத்தி நம்மில் பலரும் ஜெபிப்பதுண்டு,இன்றும் நமக்கு நன்கு தெரிந்த நபர்,வேதாகமத்தில் மட்டுமல்ல இந்த பூமியில் பிறந்த மனிதர்களில் எல்லாம் சிறந்த ஞானம் பெற்றவர்,கர்த்தருக்கென்ற முதல் ஆலயத்தை கட்டியவர் தேவாதி தேவனிடம் என்ன கேட்டார் என்பதை பார்க்கபோகிறோம்,அவர் யாரென்று இந்நேரம் தெரிந்திருக்கும் ஆம்,சாலமோன் ராஜவின் ஜெப விண்ணப்பத்தைதான் இன்று நாம் தியனித்து,சில காரியங்களை ஆவியானவர் உதவியோடு கற்றுகொள்ளபோகிறோம். எடுத்து வாசியுங்கள் 1 இராஜாக்களின் புஸ்த்தகம் 3ஆம் அதிகாரம், வேதாகமம் இல்லாத சகோதர சகோதரிகள் இந்த வசனத்தை கவனியுங்கள். " உமது ஜனங்களை நியாயம் விசாரிக்கவும், நன்மைதீமை இன்னதென்று வகையறுக்கவும், அடியேனுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளும்; ஏராள...

பழைய மற்றும் புதிய துருத்தி🛢

Image
கிறிஸ்து இயேசுவில் பிரியமான எனதருமை சகோதர சகோதரிகளே,உங்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் இனிதான நாமத்தில் வாழ்த்துகளும்,சமாதானமும்.இந்த 2022 ஆம் ஆண்டில் எனது முதல் பதிவை,பதிவிட செய்த தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரங்கள். ஒரு சில காரியங்களை நான் தியானிக்கும் போதும்,தேவ மனுஷர்களின் செய்திகள் மூலமாகவும் ஆவியானவர் எனக்கு உணர்த்தினார்,அதை உங்களுடன் இந்த பதிவின் வாயிலாக பகிர்ந்துகொள்ள ஆசை படுகிறேன்,சற்று இந்த தேவ வார்த்தைகளை கவனியுங்கள்  " ஒருவனும் புது திராட்சரசத்தைப் பழந்துருத்திகளில் வார்த்துவைக்கமாட்டான்: வார்த்துவைத்தால் புதுரசம் துருத்திகளைக் கிழித்துப்போடும், இரசமும் சிந்திப்போம், துருத்திகளும் கெட்டுப்போம்".  லூக்கா 5:37 இந்த உவமையை இயேசப்பா கூறும் இடத்தை சற்று கவனித்தும்,ஆவியானவர் தரும் வெளிச்சத்தில் தியனித்தும் பார்த்தோம் என்றால்,அங்கு இயேசப்பாவின் சீஷர்களை சிலர் அதாவது அக்காலத்து வேதபாரகர்களும்,பரிசேயரும் குற்றபடுத்துவதை காணலாம்,எதை குறித்த குற்றசாட்டு என்று உற்று நோக்கினால் பழைய நியாயபிரமான முறைமைகளை அவர்கள் கடைபிடிக்கவில்லை என்ற குற்றசாட்டே,அதற்குதான் இயேச...

பரலோக ராஜ்யம் சமிபமாயிற்று🤗

Image
கிறிஸ்து இயேசுவில் எனகன்பான சகோதர,சகோதரிகளே,அனைவரும் மகிழ்ச்சியுடனும் ,உடல் நலத்துடனும் இருப்பீர்கள் என்று விசுவாசிக்கிறேன்.இன்றைய இரவு மகிழ்ச்சியின் இரவு,கிறிஸ்துமஸ் இரவு,புத்தாடைகளும் இனிப்புக்களும் நிறைந்த இரவு,பகிர்தலின் இரவு....உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்,கடந்து வருடம் முழுவதும் நம்மை கண்ணின் மணிபோல காத்துள்ள தேவனுக்கு ஸ்தோத்திரம்! கடந்த நாட்களில் நம்மோடு இருந்தவர்கள் இப்போது இல்லை என்பது வருத்தம் அளித்தாலும் அவர்கள் கிறிஸ்துவுக்குள் நித்திரை அடைந்துள்ளதை எண்ணி மகிழ்ந்து களிகூறுங்கள். 'பரலோக ராஜ்யம் சமிபமாயிருக்கிறது' இந்த சொற்களை எங்கு வாசித்து அல்லது கேட்டு உள்ளோம் என்று நியாபகம் வருகிறதா? இந்த வேத வசனத்தை கவனியுங்கள் "அந்நாட்களில் யோவான்ஸ்நானன் யூதேயாவின் வனாந்தரத்தில் வந்து:  மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கம் பண்ணினான்."  மத்தேயு 3:1-2 உலக இரட்சகராம் இயேசு இப்பூமியில் மனு உருவில் அவதரிக்கும் முன் யோவான்ஸ்நானன் இந்த வார்த்தைகளை சுவிசேசமாக அறிவித்தான்,பலரை மனமாற்...