Posts

Showing posts from July, 2021

துதியும்,ஜெபமும்🛐

Image
கிறிஸ்து இயேசுவுக்குள் பிரியமான சகோதர,சகோதிரிகளே இந்த நாள் வெற்றியின் நாளாக அமைய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களை வாழ்த்துக்கிறேன் . இன்றைய நாளில் ஜெபம் எதற்கு,நம் பரிசுத்த வாழ்வில் ஜெபம் ஆற்றும் பங்கு,நாம் ஏன் ஜெபம் செய்யவேண்டும்,எவ்வாறு அந்த ஜெபம் அமையவேண்டும் என்ற அடிப்படை தகவல்களையும்,அதிலுள்ள சத்தியத்தையும் அறிவோம், 1.யாருக்காக ஜெபிக்கவேண்டும்:       " உங்களை     நிந்திக்கிறவர்களுக்காகவும்   உங்களைத்   துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும்   ஜெபம் பண்ணுங்கள்." மத்தேயு 5:44 ஆம்,நம் ஆண்டவரும் அவ்வாறே நமக்கு முன்மாதிரியாக தமக்கு எதிராக கரம் நீட்டி,தம்மை நிந்தித்து,சிலுவை மரணத்திற்கு ஒப்புகொடுத்தவர்களுக்காக,தந்தையிடம்,இவர்கள் அறியாமல் செய்தார்கள் என்று பரிந்து பேசி ஜெபம் செய்தார்,நமக்கு நன்மை செய்வோர்காக மட்டும் நாம் வேண்டுவோம் என்றால் பலன் ஒன்றும் இல்லை,எனவே இவர்களின் மீறுதலுகாய் நாம் ஜெபம் செய்தால் நம் பரமதகப்பன் நம் மீறுதல்களை மன்னிப்பார். 2.எவ்வாறு ஜெபிக்க வேண்டும்:    "நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய ...

இடுக்கமான வாசல் 😇🤗

Image
கிறிஸ்துவுக்குள் பிரியமான அன்பு சகோதர,சகோதிரிகளே,இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்களை வாழ்த்துவதில் எல்லை இல்லா பேரானந்தம்! இன்றைய தினத்தில் நாம் பார்க்கபோகும் தலைப்பு பரலோகராஜ்யத்துடன் தொடர்புடையது,இடுக்கமான வாசல்:பொதுவாக நாம் வீடு கட்டும் பொழுது உள்ளே செல்லும் வாசலை விசாலமாக அமைப்பது நம் வழக்கமாய் இருக்கிறது,பின்னர் இந்த இடுகமான வாசல் எங்கே உள்ளது என்ற கேள்வி எழலாம்,பின் வரும் வேதவசனத்தை சற்று கவணிப்போம்     இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.  மத்தேயு 7:13 ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.  மத்தேயு 7:14 நாம் இதில் எந்த வாசலில் பிரவேசிக்கிறோம்? அநேகர் விசாலத்தை நோக்கமாய் கொண்டு கேட்டுக்குள் பிரவேசிப்பவர்களாய் இருக்கிறோம்,இறுதியில் மிஞ்சுவது அழுகையும், புலம்பலுமே . இந்த உலகத்திற்கு உரியவராய் நாம் வாழும்வரை யாரும் நம்மை பகைபதில்லை,பரலோக ராஜ்யத்தின் சத்தியத்தை அறிந்து அதை வாஞ்சிக்கும்போத...

விடுதலையின் தேவன்

Image
கிறிஸ்துவுகுள் என் இனிய சகோதர,சகோதிரிகளே உங்களுக்கு உலக இரட்சகராம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சமாதானம் உண்டாவதாக,  என் இன்றைய தலைப்பில் தேவன் தருவதான நித்திய விடுதலை குறித்த சில தகவல்களை பகிரவிருக்கிரறேன்,பொதுவாக யாருக்கு விடுதலை தேவை; இந்தியாவிற்கு வெள்ளையனிடம் இருந்து விடுதலை கிடைத்தது,அவ்வாறு ஒரு அடிமை தனத்தில் இருந்து பின் திரும்புவதே விடுதலையாம், இந்த வரிசையில் நம் ஆண்டவர் நமக்கு எதிலிருந்து விடுதலை கொடுத்தார் நாம்தான் இப்போது சுதந்திரவாளிகளே என்று தோன்றலாம்  "இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." யோவான் 8:34 ஆம் இப்போது புரிந்திருக்கும் என்று என்னுகிறேன் ,நாம் சுதந்திரவாளிகளாய் இருந்தும் அவனவன் உடன்பட்டு செய்கின்றதான பாவமே நம்மை ஆளுகின்றது,நம்மில் ஒருவனும் நம்மிடம் பாவம் இல்லை என்று கூற இயலாது,இந்த அடிமை தனமே நம்மை பிணியாலர்கள் ஆக்கி,நம்மை நித்தியஜிவன் அடைய தடை செய்கிறது 'பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண...

புதிய உடன்படிக்கையின் பலி

Image
 சர்வாங்க தகனபலியும்,நம் பரிகாரியும்  நம் ஆண்டவர் இயேசுவுக்குள் பிரியமான அன்பு உள்ளங்களே கிறிஸ்துவுக்குள் உங்களை வாழ்த்துவதில் மற்றற்ற மகிழ்ச்சி அடைகிறேன் ,நம் தாய்நாடகிய இந்தியா இந்து சமயம் தழுவிய நாடு என்பது நாம் அறிந்தது, இங்கு ஆயிரம்,ஆயிரம் கோடி தேவர்கள் உண்டு என்பதும் நிதர்சனமே      பலி செலுத்தும் மரபு ஆதி முதல் உள்ள மரபே,அது அனைத்து சமயத்திலும் பின் பற்றுவார்கள் ஆதியிலே பழைய ஏற்பாட்டிலும் பலவித பலிகள் செலுத்த பட்டன தகனபலி,பாவ நிவர்த்தி பலி என பல உண்டு,இவைகளை ஒரு பரிகாரமாக செலுத்தினார்கள்,இன்றும் நம் வழக்கத்தில் இவை உண்டு   ஆம்,நண்பர்களே பாவம் செய்தவர்கள் பலி செலுத்துவது முறையே சரி, புதிய ஏற்பாட்டிலும் ஒரு பலியுண்டு யாருக்கெல்லாம் அது தெரியும்? ஆனால் இந்த பலி சற்று வித்யாசமாய் பாவிகளால் செலுத்த படாமல் யாதொரு குற்றமும் அறியாத ஆட்டுகுட்டியால் நிறைவேற்றப்பட்டது ஆம்,நீங்கள் நினைப்பது சரி தான், நம் ஆண்டவர் இயேசு செலுத்திய கல்வாரி பலி தான் அந்த பலி,இது ஒரு தனிமனித பாவநிவர்தி அல்ல இந்த ஒட்டுமொத்த உலக மீட்புகாக நம் மீட்பர் தம்மையே கொடுத்து இர...