வேதத்தை மட்டுமே பின்பற்றுங்கள்☺
கிறிஸ்து இயேசுவில் பிரியமான என் அன்பு சகோதர, சகோதரிகளே. ஆண்டவர் படைத்ததொரு வெற்றியின் நாளில் இந்த பதிவின் வாயிலாக உங்கள் அனைவரோடும் இடை படுவதில் கர்த்தருக்குள் மிகவும் மகிழ்ந்து களிகூறுகிறேன்,இன்றைய தினத்தில் உலகிற்கு வெளிச்சமாக அருளப்பட்ட தேவனின் வார்த்தைகளை உள்ளடக்கிய வேதாகமம் கிறிஸ்தவ வாழ்விற்கு எவ்வளவு முக்கியம் என்று உங்களோடு பேசும்படி ஆவியானவர் என்னை ஏவினார்,சென்ற பதிவுகளில் 'மோசம் போக்கும் ஓநாய்கள்' என்ற தலைப்பில் சில காரியங்களை ஆவியானவர் வெளிப்படுத்தினார்,அதை படித்து இருப்பீர்கள் என்று விசுவாசிக்கிறேன்,அந்த ஓநாய்களின் பட்சிக்கும் தன்மையையும்,மோசம் போக்கும் விதத்தையும் நாம் அறிந்துகொள்ள பரிசுத்த வேதாகமத்தை தவிர வேறு வேத புத்தகம் உலகில் இதுவரை அருளப்படவில்லை,எத்தனையோ மனிதர்கள் வேதாகமத்திற்கு ஒப்பாய் ஞானமான பல புத்தகங்கள் எழுதி இருக்கலாம் ,மனிதன் தவறுவான் தேவன் என்றென்றும் வாக்கு மாறாதவர்,உண்மையுள்ளவர் எனவேதான் பரிசுத்த வேதாகமத்திற்கு ஒப்பான புத்தகம் இல்லை என்றேன்-ஆமென் 1.வேதம் ஏன் வாசிக்கவேண்டும் : இந்த நவினகாலத்தில் நாம் ஓடி ,ஓடி ஓய்வின்றி உழைக்கிறோம்,காலம் ப...