Posts

Showing posts from January, 2022

மார்ஸ் மேடையும்,பவுலும்😎

Image
கிறிஸ்து இயேசுவில் எனக்கு அன்பான சகோதர சகோதரிகளே,இந்த பதிவில் உங்களுடன் கலந்துரையாட கிருபை செய்த இயேசுப்பாவுக்கு  ஸ்தோத்திரங்கள்,அவர் நாமம் மட்டுமே மகிமை படட்டும் நண்பர்களே இந்த 'மார்ஸ் மேடை' குறித்து நீங்கள் எங்காவது கேள்வி பட்டதுண்டா? உங்களில் சிலருக்கு தெரிந்திருக்க வாய்புகள் உண்டு,இந்த மார்ஸ் மேடை அத்தேனே என்னும் பட்டணத்தில் உள்ளது,சரி அதை நான் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும் என்றுதானே சிந்திக்கிறிர்கள் அதைதான் இந்த பதிவில் காணப்போகிறோம்,தொடர்ந்து ஜெபத்துடன் வாசியுங்கள்..நம்மில் பலர் இரட்ச்சிக் பட்டு இருக்கிறோம்-ஆமென்,இரட்ச்சிபின் முதல் நோக்கமே இயேசுவை அறியாத ஜனங்களுக்கு சுவிசேஷம் அறிவிப்பது,ஆனால் வேதத்திலுள்ள சத்தியங்களை அறிந்த நமக்கோ யாரிடம்,எப்படி அந்த மீட்பின் செய்தியை அறிவிப்பது என்று தெரிவதில்லை,பல சமயங்களில் வாக்குவாதங்களுக்குள் சிக்குண்டு தவிப்பதுண்டு,இங்கு அத்தேனே பட்டணத்திலும் இதுபோன்ற கருத்து வேறுபாடு எழும்புகிறது ஆனால் அதை கையாழுபவர் நம்மிலும் சற்று தேரினவர் ஆம்,அப்போஸ்தலனாகிய பவுல் தான் அந்த நபர்,அவர் வாக்குவாதம் செய்த இடம் விக்கிரக ஆராதனைகாரர்கள் நிறைந்...

கேட்டதும்,கேளாததும்🤔

Image
கிறிஸ்து இயேசுவில் பிரியமான அன்பு சகோதர சகோதரிகளே,இந்த பதிவின் வாயிலாக மீண்டும் உங்களுடன் உரையாடுவதில் கர்த்தருக்குள் பெரு மகிழ்ச்சியடைகிறேன்,இன்றைய தியானத்திற்கு ஆவியானவர் அருளின மறைவான மன்னா "கேளுங்கள் உங்களுக்கு கொடுக்க படும்" இந்த இறை வர்த்தை அனைவருக்கும் பரிச்சயமான வார்த்தைதான்,அநேகதரம் ஜெபிக்கையில் இந்த வசனத்தை நினைவுபடுத்தி நம்மில் பலரும் ஜெபிப்பதுண்டு,இன்றும் நமக்கு நன்கு தெரிந்த நபர்,வேதாகமத்தில் மட்டுமல்ல இந்த பூமியில் பிறந்த மனிதர்களில் எல்லாம் சிறந்த ஞானம் பெற்றவர்,கர்த்தருக்கென்ற முதல் ஆலயத்தை கட்டியவர் தேவாதி தேவனிடம் என்ன கேட்டார் என்பதை பார்க்கபோகிறோம்,அவர் யாரென்று இந்நேரம் தெரிந்திருக்கும் ஆம்,சாலமோன் ராஜவின் ஜெப விண்ணப்பத்தைதான் இன்று நாம் தியனித்து,சில காரியங்களை ஆவியானவர் உதவியோடு கற்றுகொள்ளபோகிறோம். எடுத்து வாசியுங்கள் 1 இராஜாக்களின் புஸ்த்தகம் 3ஆம் அதிகாரம், வேதாகமம் இல்லாத சகோதர சகோதரிகள் இந்த வசனத்தை கவனியுங்கள். " உமது ஜனங்களை நியாயம் விசாரிக்கவும், நன்மைதீமை இன்னதென்று வகையறுக்கவும், அடியேனுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளும்; ஏராள...

பழைய மற்றும் புதிய துருத்தி🛢

Image
கிறிஸ்து இயேசுவில் பிரியமான எனதருமை சகோதர சகோதரிகளே,உங்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் இனிதான நாமத்தில் வாழ்த்துகளும்,சமாதானமும்.இந்த 2022 ஆம் ஆண்டில் எனது முதல் பதிவை,பதிவிட செய்த தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரங்கள். ஒரு சில காரியங்களை நான் தியானிக்கும் போதும்,தேவ மனுஷர்களின் செய்திகள் மூலமாகவும் ஆவியானவர் எனக்கு உணர்த்தினார்,அதை உங்களுடன் இந்த பதிவின் வாயிலாக பகிர்ந்துகொள்ள ஆசை படுகிறேன்,சற்று இந்த தேவ வார்த்தைகளை கவனியுங்கள்  " ஒருவனும் புது திராட்சரசத்தைப் பழந்துருத்திகளில் வார்த்துவைக்கமாட்டான்: வார்த்துவைத்தால் புதுரசம் துருத்திகளைக் கிழித்துப்போடும், இரசமும் சிந்திப்போம், துருத்திகளும் கெட்டுப்போம்".  லூக்கா 5:37 இந்த உவமையை இயேசப்பா கூறும் இடத்தை சற்று கவனித்தும்,ஆவியானவர் தரும் வெளிச்சத்தில் தியனித்தும் பார்த்தோம் என்றால்,அங்கு இயேசப்பாவின் சீஷர்களை சிலர் அதாவது அக்காலத்து வேதபாரகர்களும்,பரிசேயரும் குற்றபடுத்துவதை காணலாம்,எதை குறித்த குற்றசாட்டு என்று உற்று நோக்கினால் பழைய நியாயபிரமான முறைமைகளை அவர்கள் கடைபிடிக்கவில்லை என்ற குற்றசாட்டே,அதற்குதான் இயேச...