யுத்தநாள்-2 சர்வாயுதவர்க்கம் 🛡🗡
கிறிஸ்து இயேசுவில் பிரியமான சகோதர,சகோதரிகளே..பிதாவின் அன்பும்,நம் இரட்சகரான இயேசு கிறிஸ்து தரும் சமாதானமும்,பரிசுத்த ஆவியானவர் தரும் ஐக்கியமும்,விசுவாசமும் சதாகாலங்களும் உங்களனைவரோடும் இருப்பதாக-ஆமென்। என்னுடைய கடந்த பதிவினை வாசித்த அனைவருக்கும் நன்றிகள்,அதன் தொடர்சியை எனது அடுத்த பதிவில் பதிவிடுவேன் என்று சொன்னேன் அல்லவா! சரி,வாருங்கள் இன்று கிறிஸ்துவின் ஆவியானவர் நமக்கு அளிக்கும் போராயுதங்களை குறித்த காண்போம்,முதலாவது நீங்கள் அனைவரும் பிசாசுடனான நமது ஆவிக்குரிய யுத்தத்திற்கு தயாரா என்று சுயசோதனை செய்துபாருங்கள்,தயாராக உள்ள அனைவரும்,சர்வாயுதவர்க்கங்களை தரித்துகொள்ளுங்கள்,தகுதிபடாதவர்களோ உங்களை தேவனுக்கென்று ஒப்புகொடுத்து தகுதி படுத்திக்கொள்ளுங்கள் இதை தான் பரிசுத்த பவுல் பின்வருமாறு எபேசு பட்டணத்தாருக்கு எழுதியுள்ளார் "நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்". எபேசியர் 6:11 'போர்' அல்லது 'யுத்தத்தில்' எதிரியை நாம் மேற்கொள்ள தரமான ஆயுதங்கள் அவசியம் அல்லவா? இன்...